நடிகை பாவனாவுக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.
தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை பாவனா சில தினங்களுக்கு முன்னர் காரில் கடத்தப்பட்டு சில நபர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்.
இது சம்மந்தமாக பொலிசார் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன், பாவனா பலாத்காரம் செய்யப்படவில்லை.
பாலியல் தொல்லைக்கு மட்டுமே ஆளானார். ஆனால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக எப்படி தகவல் வருகிறது என்று தெரியவில்லை.
பாவனாவுக்கும் பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. பாவனாவுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வருங்கால கணவரின் முடிவை மாற்றவில்லை.
திட்டமிட்டபடி அவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடக்கும் என கூறியுள்ளார்.