சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இவர், தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளதால், பொலிசாரிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நந்தினி குறித்து கார்த்திக்கேயனின் அம்மா, பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
எனது மகனின் இறப்பிற்கு நந்தினி தான் காரணம் என்றும் எனது மகனை மிரட்டி நந்தினி திருமணம் செய்துகொண்டார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்திகேயனின் நண்பர் ஒருவர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.