பாண்டவர் பூமி படத்தில் தோழா தோழா பாடலில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ஷமிதா. இந்த படத்தின் மூலம் அவர் பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஆனால், இப்படத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவசக்தி என்ற சீரியலில் நடித்தார், அதோடு, அந்த சீரியலில் நடித்த ஸ்ரீகுமாரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் ஷமிதா.
இதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் இவர் ‘நல்ல படங்கள் இல்லை என்றால் என்ன நல்ல கணவர் கிடைத்துவிட்டாரே’ என்று சந்தோஷமாக கூறுகிறார்.