இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க உள்ளார்.
சுமார் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டினால் ஹைதராபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் அனைவரும் மறுவாழ்வு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் 133 பெண் பிச்சைக்காரர்கள் Cherlapalliல் இருக்கும் Ananada ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களை Cherlapalli சிறை கண்காணிப்பாளர் K Arjun Rao விசாரித்த போது சில நம்ப முதியாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களில் இரண்டு பெண்களில் ஒருவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் என்றும் மற்றொருவர் லண்டனில் வேலைபார்த்து வந்தவர் என்றும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது விசாரணையில் இரண்டு பெண்கள் அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளனர். அந்த பெண்ணின் பெயர் Farzona (50) முதுகலை பட்டம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருக்கு அமெரிக்காவிலும், ஹைதராபாத்திலும் ஒரு சொந்த வீடும் உள்ளதாம். மேலும் மகன் ஒருவர் உள்ளதாகவும் விசாரணாஇயில் தெரியவந்துள்ளது.
இநத பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் கோவில் கோவிலாக சென்றுள்ளார், அதன் பின் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்போது பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், தான் இங்குள்ள தர்காவில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, என்னை பார்த்துவிட்டு, பார்த்தும் பார்க்காததும் போல் தன் மகன் சென்றதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் அவரது மகனை தொடர்பு கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணின் பெயர் Rabiya Baseera எனவும் ஹைதராபாத்தின் Langar Houz பகுதியை சேர்ந்தவர் எனவும் அமெரிக்கவின் கிரீன் கார்டு ஹோல்டர் ஆன இவருக்கும் வீடுகல் உள்ளது. மன உளைச்சல் காரணமாகவே பிச்சை எடுத்துவருவதாக கூறியுள்ளார். இவரை அவரது உறவினர்களிடம் அனுப்பி வைத்துவிட்டதாக Arjun Rao கூறியுள்ளார்.