Sunday, 12 March 2017

மாணவி மிஷேல் மரணத்தில் வெளியான அதிர்சசி தகவல்



கேரளாவில் 18 வயது மாணவி மிஷேல் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில் மாணவியின் தந்தை பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.

Palarivattom உள்ள சிஏ பயிற்சி மையத்தில் பயின்று வந்த Elanji பகுதியை சேர்ந்த மிஷேல், சமீபத்தில் கொச்சி நீர்ப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் நீரில் மூழ்சி இறந்தார் எனவும், அவர் உடலில் எந்த மர்மமான காயமும் இல்லை என தெரியவந்தது. இதனால், இது தற்கொலையாக இருக்கும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், மிஷேலை ஒரு நபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மிஷேலுக்கு விருப்பம் இல்லாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதே சமயம், வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையின் மிஷேல் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை ஏற்க மறுத்த அவரின் தந்தை Shaji கூறியதாவது, மிஷேல் சிஏ படித்து அவரது கனவை நிறைவேற்றுவதையே குறிக்கோளாக கொண்டு இருந்தார்.

அவரின் கனவை குறித்து என்னிடம் அதிகம் பகிர்ந்துக்கொள்வார். மிஷேல் மிக தைரியமான பெண் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. மூழ்கி இறந்தது போல் மிஷேலின் உடல் தெரியவில்லை. அவர் நீரில் மூழ்சி இறந்ததிற்கான எந்த தடயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மிஷேலுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த நபரை பிடித்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next

Related