இப்போது உள்ள நடிகை நயன்தாரா போல் 90களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருந்தவர் நடிகை சிம்ரன்.
ரஜினி தவிர மற்ற எல்லா நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு காணாமல் போயிருந்தார்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சிம்ரன் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். செல்வா இயக்க்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க 23 லட்சம் சம்பளத்தை படக்குழு பேச, இறுதியில் ரூ. 30 லட்சத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்ரன்.