Tuesday 7 November 2017

விடுதியில் 30 மாணவிகளை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த செக்யூரிட்டி…!!



பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற நகர பகுதிகளில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருப்பது கிடையாது.

அப்படித்தான் டெல்லியில் நடுத்தர வர்த்தகத்தினர் தங்க கூடிய ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் தனது உறவினர் ஒருவரை செக்யூரிட்டியாக நியமித்தார். அவருக்கு வயது 35 இருக்கும்.

அவர் இரவு நேரத்தில் தங்கியுள்ள பெண்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மேலும் அவர்கள் பாய்பிரண்டுடன் சுற்றி விட்டு தாமதமாக வந்தாலும் எதுவும் சொல்வது கிடையாது.

இதனால் அவர் எல்லோருக்கும் நெருக்கமானவராக இருந்தார். அப்படித்தான் ஒருநாள் ஒரு மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்து விட்டார்.

அதனை காட்டி அந்த மாணவியை தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியும் தனது நிர்வாண படம் வெளியில் வந்து விட கூடாது என்பதற்காக செக்யூரிட்டியின் ஆசைக்கு இணைங்கினார்.

அதோடு ஒரே வாரத்தில் அந்த மாணவி விடுதியை காலி செய்து விட்டு சென்று விட்டார்.

இதே டெக்னிக்கை பயன்படுத்தி அந்த செக்யூரிட்டி பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த விடுதியில் உள்ள பெண்களில் பெரும்பாலோனோர் விடுதியை காலி செய்ய தொடங்கினர்.

இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் விடுதியை காலி செய்த பெண்களை தொடர்பு கொண்டு காரணம் கேட்டார்.

அப்போது செக்யூரிட்டி சரியில்லை என்று மேலோட்டமாக கூறினர். 4 பேர் மட்டுமே மிரட்டி கற்பழிக்கப்பட்டதை கூறினார்.

இதனை தொடர்ந்து அந்த செக்யூரிட்டியின் செல்போனை சோதனை செய்தபோது அதில் 30க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது 30க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்தது தெரியவந்தது.

அதன்பிறகு அவரை வேலையில் இருந்து நீக்கியதோடு, போலீசில் பிடித்து கொடுத்தார் அந்த விடுதி உரிமையாளர்.


Next

Related