Sunday, 26 March 2017

பவர் பாண்டி படத்தின் கதையை கூறிய தனுஷ்



தனுஷ் முதன் முறையாக இயக்கும் படம் பவர் பாண்டி. இவர் தற்போது சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிகொடுத்துள்ளார்.

அதில் என் அப்பாவை என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்துவைத்து எங்கள் குடும்பத்தை வாழவைத்தவர் ராஜ்கிரண். அவரை வைத்து என் அப்பா முதன் முதலாக படம் இயக்கினார்.

தற்போது நானும் அவரை வைத்து எனது முதல் படத்தை இயக்கியுள்ளேன். நாம் வாழும் இந்த உலகத்தில் நல்லதும், கெட்டதும் இருக்கிறது.

அன்பு, நிம்மதி, பாசம், கோபம் போன்ற பல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. இதில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே பவர் பாண்டி படத்தின் கதை என தனுஷ் கூறியுள்ளார்.


Next

Related