Saturday, 4 March 2017

வெளியில் சொல்ல கூடாது - விஜய் செய்த காரியம்?



விஜய் படத்தில் நடிப்பது தாண்டி தனது ரசிகர்களுக்கும், சினிமா துறைக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அவர் செய்யும் காரியங்கள் ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் வெளியே தெரியும்.

இந்நிலையில் அவர் ஒரு பெரிய காரியத்தை செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கம், பிறகு இயக்குனர் சங்கம் என நன்கொடை வழங்கிய விஜய், தெறி படத்தை முடித்ததும் ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு நன்கொடை வழங்கியிருந்தார்.

தற்போது பைரவா படத்தில் நடித்து முடித்த பிறகு சமீபத்தில் படத்தொகுப்பாளர்கள் சங்கத்துக்கு பெரிய தொகையை வழங்கியுள்ளார்.

அதோடு இதை பற்றி வெளியில் சொல்ல கூடாது என்றும் அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார்.


Next

Related