Tuesday, 16 May 2017

ஜாதகம் இல்லாதவர்கள் இதை செய்திடுங்கள்...!



பரிகாரங்கள் என்பது ஒருவரின் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜாதகம் இல்லாதவர்கள் தங்களின் கஷ்டங்களை போக்க பரிகாரம் எப்படி செய்ய வேண்டும்?

ஜாதகம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

பசு மாடுகளுக்கு புல், வைக்கோல் மற்றும் அகத்திக்கீரை போன்ற தீவனங்களை வழங்க வேண்டும்.

ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் செய்ய வேண்டும்.

தினமும் பைரவருக்கு உணவிட்டு வர வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

பறவைகளுக்கு நவதானியங்களும், காகத்திற்கு உணவுகளும் தினமும் மறக்காமல் வைக்க வேண்டும்.

தினமும் பெரியோர்களின் காலில் விழுந்து, அவர்களின் நல்ல ஆசியை பெற வேண்டும்.

பெற்றோர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் சொற்படி நடக்க வேண்டும்.

ஏழை மற்றும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு பொருள், கல்வி உதவி அளிக்க வேண்டும்.

கோவில்களில் அடிக்கடி அன்னதானம் செய்ய வேண்டும். தினமும் காலையில் குளித்து விட்டு, சூரியக் கடவுளை வணங்க வேண்டும்.
ஜாதகம் இல்லாதவர்கள் முக்கிய வேலையாக வெளியே செல்லும் போது, சர்க்கரை கலந்த தயிரை சிறிதளவு சாப்பிட்ட பின் செல்ல வேண்டும்.


ஜாதகம் இல்லாதவர்கள் விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகரை வேண்டி, வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.


Next

Related