Thursday, 1 December 2016

ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர், 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.!



முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜிவின் மாபெரும் திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். - முதல் மூன்று மாதங்களிலேயே, ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்ஆப், ஸ்கைப்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது. - அது 50 மில்லியன் பயனர்களை தாண்டிவிட்டது. - ஜியோ இப்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். - ஜியோ, தரையில் இருந்து இணைய இணைப்பு கட்டப்பட்ட ஒரு வலுவான தரவு நெட்வொர்க் ஆகும்.

தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில்

சராசரி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை விட 25 மடங்கு அதிகமான தரவை ஜியோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கிறார்கள். - ஜியோவின் வெல்கம் ஆஃபர் குறைபாடுகளை களைவதற்காக நங்கள் நிறைய கருத்துக்களை பெற்றோம், நீங்கள் சொல்ல நாங்கள் கேட்டு வருகிறோம். அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது - தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில் ஜியோ இப்போது மிக சிறப்பான நிலையில் உள்ளது.

சுமார் 2 லட்சம் மையங்கள்

ஜியோ மிக வேகமான பாதையை அமைத்துக்கொள்ள உதவிய அரசாங்கத்திற்கு நன்றிகள் - இன்று ஜியோ வெற்றிகரமாக ஈகேவைசி (eKYC) மூலம் இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் மையங்கள் வரை பரவியுள்ளது. - இது இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் மொத்த எண்ணிகைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது, மார்ச் 2017-ல் இந்த எண்னிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்

2016 டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு புதிய ஜியோ பயனருக்கும் தரவு, குரல், ஜியோ ஆப்ஸ், வீடியோ ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக மார்ச் 31, 2017 வரை வழங்கப்படும். - இதை "ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்" என அழைக்கலாம். - ஏற்கனவே ஜியோ சேவையை அனுபவிக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களும் நீடிக்கப்பட்டுள்ள சலுகைகளை மார்ச் 31 சிம் கார்ட் எண்களை மாற்றாமலேயே அனுபவிக்கலாம்.


Next

Related